சென்னை, ஜூன் 18- முழு ஊரடங்கு காலத் தில் அனுமதி சீட்டு இன்றி வெளியே சுற்றினால் வாக னம் பறிமுதல் செய்யப்படு வதுடன், கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவ தற்காக ஜூன் 19 முதல 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அமல்ப டுத்தப்படுகிறது. இந்த நாட்க ளில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து சென்னை காவல்துறை அறி விப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை வங்கிகளுக்கு செல்லும் ஊழியர்கள் அடையாள அட்டையை காண்பித்து செல்ல வேண்டும்.
21 மற்றும் 28 ஆம் தேதி ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமை களிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள தால், மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், பால் நிலையங்கள், அமரர் ஊர்தி கள் தவிர மற்ற கடைகள் மற்றும் வாகனங்கள் எதற் கும் அனுமதியில்லை. அதே சமயம், அவசர மருத்துவ தேவைக்கு மட்டும் பிற வாக னங்கள் பயன்படுத்தப்பட லாம். இ-பாஸ் வைத்திருப்ப வர்கள் அதை பெரிய அள வில் ஜெராக்ஸ் எடுத்து காவல்துறையினருக்கு தெரி யும்படி காண்பிக்க வேண் டும், போலி இ-பாஸ் வைத்தி ருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும். 2கிலோ மீட்டர் சுற்றள விற்குள் அத்தியாவசிய தேவைக்காக கடைகளுக்கு செல்வோர், வாகனங்களை தவிர்த்து நடந்து செல்ல வேண்டும்.