tamilnadu

img

தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை

சென்னை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கை தொடக்கத்தில் சிபிசிஐடி கொலை வழக்காக பதிவு செய்து  8-க்கும் மேற்பட்ட போலீசாரை கைது செய்தனர். மேலும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசாரும் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றசாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டால் தொடக்கத்தில் தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதிக்கப்பட்டது. 
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

;