tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

மாணவிக்கு நிதி உதவி

காஞ்சிபுரம், ஜூன் 30 - காஞ்சிபுரத்தில் கடன் தொல்லையால் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட  நெசவுத் தொழிலாளியான மணி என்பவரின் மகளுக்கு, தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்து படிக்க தந்தையை இழந்த மாணவிக்கு வேர்கள் அறக்கட்டளை சார்பாக ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை அறக்கட்டளை நிறுவனர் ஜி.நளினி வழங்கி னார். தமிழ்நாடு பாலர் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் வி.சிவப்பிரகாசம் உடனிருந்தார்.

சட்டபடிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்

புதுச்சேரி, ஜூன் 30- புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் 5 ஆண்டு சட்டப் படிப்புக்கான (2024-2025) மாணவர் சேர்க்கை சென்டாக் அரசு கலந்தாய்வு மூலம் நடைபெற்று வருகிறது. 3 ஆண்டு சட்டப்படிப்பு மற்றும் முதுகலை பிரென்ச் பட்டய படிப்புக்கான மாணவர் சேர்க்கை சட்டக் கல்லூரி மூலம் நடைபெற உள்ளது. புதுச்சேரி மதகடிப்பட்டில் இயங்கி வரும் மனகுல விநாயகர் சட்டப்பள்ளியில் உள்ள 3 ஆண்டு படிப்பில் அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கான, மாணவர் தேர்வு நடைபெற உள்ளது. தற்போது 2024-25 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் திங்கட்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை அரசு சட்டக் கல்லூரியில்  விநியோகிக்கப்பட உள்ளது. இந்த படிப்பு களில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 24 ஆம் தேதியாகும். விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ. 1000, ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களுக்கு ரூ. 500. டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் 2024-25 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்களை பெறலாம் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அரசு சட்டக் கல்லூரியில் சமர்ப்பிக்கலாம்.

கடலூர் முதுநகர் அருகே முன்னாள் கவுன்சிலர் படுகொலை

கடலூர், ஜூன் 30- கடலூர் முதுநகர் அருகே உள்ள வண்டிபாளையம் ஆலை காலனியை சேர்ந்தவர் தேவராஜ் மகன் புஷ்ப நாதன் (45). முன்னாள் கவுன்சிலர். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவருக்கு மஞ்சுளா என்ற மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர்.  புஷ்பநாதன் சனிக்கிழமை இரவு (ஜூன் 29) தனது இருசக்கர வாகனத்தில் புதுவண்டி பாளையம் சூரசம்ஹாரத் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிலர் அவரை பின்தொடர்ந்து வந்து வழிமறித்துள்ளனர். அவர்களிடம் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்துள்ளது. இதனால், பதறிய புஷ்பநாதன், தனது இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.  அவரை விரட்டி சென்ற அந்த கும்பல் வெட்டி சாய்த்தது.  ரத்த வெள்ளத்தில் சரிந்த புஷ்பநாதன் சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தார். இதைத் தொடர்ந்து அந்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது.  இது குறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து புஷ்பநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த கடலூர் டிஎஸ்பி பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். அதிமுக உட்கட்சி பூசல் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்ததா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜமாபந்தியில் சிபிஎம் மனு

 ராணிப்பேட்டை, ஜூன் 30 - ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டத்தில் வியா ழனன்று (ஜூன் 27) நடைபெற்ற ஜமாபந்தியில் ஆற்காடு - கலவை சாலையில் போக்குவரத்து இடையூறுகள் சரி செய்து,  ஆற்காடு - செய்யாறு சாலையில் பாலாறு கால்வாய் ஆக்கிரமிப்புகளை மீட்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஆற்காடு தாலுகா செயலாளர் எஸ். செல்வம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி யிடம் கோரிக்கை மனு அளித்தனர்.  இதில் மாவட்ட குழு உறுப்பினர் டி. சந்திரன், தாலுகா குழு உறுப்பினர்கள் கோதண்டராமன், மதியழகன், மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வீடுகள் பெற ஆதார் எண் கட்டாயம் 

சென்னை, ஜூன் 30-  தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் வீடுகளை பெற ஆதார் எண் கட்டா யம் என தமிழ்நாடு அரசு,  அரசாணை வெளி யிட்டுள்ளது.  அதன்படி, நலத்திட்டம் பெறும் பயனாளிகள் ஆதார் எண் வைத்திருக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரத்திற்கு உட்பட்ட பர்களாக இருக்க வேண்டும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப் பட்டுள்ளது.  மேலும் ஆதார் எண் பெறும்வரை விண்ணப்பம் செய்ததற்கான அடை யாளச்சான்று, வங்கி புத்த கம், பான்அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை அளிக்கலாம்.