tamilnadu

img

முன்னாள் எம்எல்ஏ லி.அய்யலுசாமி மறைவு... சிபிஐ இரங்கல்

சென்னை:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடியும். தமிழ்நாடு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான தோழர் லி.அய்யலுசாமி அக்.23 அன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 92.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ள குலசேகரபுரம் என்கிற பெருமாள் பட்டி என்ற ஊரில் பிறந்த லி.அய்யலுசாமி சிறுவயது முதல் பொதுவாழ்வில் ஆர்வம் காட்டியவர்.விவசாயிகளை சங்க அமைப்பில் திரட்டி நிலவுரிமை, கட்டுபடியான விலை, கடன் நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது தீவிரமான போராட்டங்களை நடத்தியவர்.விவசாயிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் சோ. அழகர்சாமி, எம். ஆதிமூலம், இரா. நல்லகண்ணு, வி.எஸ்.காந்தி, பி.மைதீன், கே.செல் லையா, முத்துமாணிக்கம், எம்.எஸ்.தேனு போன் றோருடன் இணைந்து செயல் பட்டவர்.தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாநிலத் தலைவர், பெருமாள்பட்டி ஊராட்சித் தலைவர், பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டவர்.1996 ஆம் ஆண்டு கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்வு செய் யப்பட்டு, 5 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர், மாநிலக் குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளிலும்  பணியாற்றிய சிறப்புக்கு உரியவர் லி.அய்யலுசாமி. இவருக்கு புஷ்பவள்ளி என்ற மகளும், கனகராஜ், லெனின் என இரு மகன் களும் இருக்கின்றனர்.அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக் குழு செவ்வணக்கம் கூறி  அஞ்சலி செலுத்துகிறது. அன்னாரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.