சென்னை, ஜூன் 23- தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரும், சிபிஐயில் அதிக நீண்ட காலம் பணியாற்றியவருமான வி.ஆர்.லட்சுமி நாராயணன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91. மறைந்த, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் சகோதரர் வி.ஆர்.லட்சுமி நாராயணன். வழக்கறிஞருக்குப் படித்த பின்னர் ஐபிஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர். 1951ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக காவல்துறையில் சேர்ந்தார். முதன்முதலாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார். பின்னர், தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு குழு டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார். தனது பணிக்கால த்தில் பெரியார், ராஜாஜி. காமரா ஜர், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி என பலதலைவர்கள், முதலமைச்சர்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர். நேர்மையாகச் செயல்பட்டு பலரால் பாராட்டப்பட்டவர். 1970 முதல் 1980 வரைக்கும் தில்லி யில் சிபிஐயில் பணியாற்றினார். இந்திராகாந்தி, மொரார்ஜி தேசாய், சரண்சிங் உள்ளிட்ட பல தலைவர்களுடன் பழகியவர். 1977 ஆம் ஆண்டு ஜனதா கட்சியின் ஆட்சியில் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது, சிபிஐ இணை இயக்கு நராக வி.ஆர்.லட்சுமி நாராய ணன் பணியாற்றினார். அப்போது நெருக்கடி நிலை தொடர்பான வழக்கில் இந்திரா காந்தி கைது செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது வி.ஆர்.லட்சுமி நாராயணன் தான் இந்திரா காந்தியை கைது செய்தார். 1980-ல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது சிபிஐயிலிருந்து விடுவிக்கப்பட்ட லட்சுமி நாராயணன், தமிழக காவல்துறைக்கு மாற்றப்பட்டார். லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரியாக பணியாற்றி அவர் 1985ல் ஓய்வு பெற்றார். தனது பணிக் காலத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு வழிகாட்டியாக இருந்த லட்சுமி நாராயணன், காவல்துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். காவல்துறை யில் தனது அனுபவத்தைக் கொண்டு ‘நெஞ்சில் உரம் நேர்மைத் திறம்’ என்ற நூலை எழுதியுள்ளார். பிறகு, சென்னை அடையாறிலுள்ள வீட்டில் வசித்து வந்தார். வயது முதிர்வின் காரணமாக வி.ஆர்.லட்சுமி நாராயணன் ஞாயிறன்று(ஜூன்23) கால மானார்.