tamilnadu

img

பதிவு செய்யாத நெசவாளர்களுக்கு ரூ.2000 நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை:
நல வாரியத்தில் பதிவு பெறாத நெசவாளர்களுக்கு ரூ.2,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித் துள்ளது.தகுதியான நெசவாளர்கள் அந்தந்த மாவட்ட கைத்தறி, துணி நூல் துறைக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் என்றும் நிதியுதவிக்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை கைத் தறி, துணிநூல் துறை இயக்குநர் வழங்குவார் என்றும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு வருமாறு:-

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும் வகையில் மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு மாநில அரசு, பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நிவாரண உதவித் தொகை வழங்கி வருகிறது. இதன் மூலம் பொது மக்களும் பல்வேறு தொழிலாளர்களும் பயன் அடைந்து வருகின்றனர்.தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப் பினர்களாக உள்ள 1,03,343 நபர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நல வாரியத்தில் பதிவு பெறாத கைத்தறி நெசவாளர்கள், தங்களுக்கும் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று நிவாரணத் தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் நெசவாளர்களின் பட்டியல், விலையில்லா 200 யூனிட் மின்சாரம் பெற்று பயன்பெறும் நெசவாளர்களின் பட்டியலுடன் ஒத்திசைவு செய்யப்பட்டு, அதனடிப்படையில், ஏற்கனவே வழங்கப் பட்டுள்ள உதவியைப் பெற்ற பட்டியலில் விடுபட்டுள்ள நெசவாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஊரடங்கு கால நிவாரணத் தொகையான ரூ.2,000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

;