tamilnadu

img

சாட் பிரியர்களுக்காக ஒரு உணவகம் திறப்பு 

 சென்னை,ஆக 20- சாட் பிரியர்களுக்காக சென்னை அடையாறு காந்தி நகர் 2வது பிரதான சாலையில் கைலாஷ் பர்பாட் என்ற உணவகம் திறக்கப்பட்டு ள்ளது. 1940 ஆம் ஆண்டு அன்றைய ஒன்றுபட்ட இந்தி யாவில் கராச்சி (இன்று பாகிஸ்தான்) நகரில் முல்சந்தானி சகோதரர்களால் சாலையோர சாட் கடையாக  துவங்கப்பட்டது. பிரி வினைக்கு பின்னர் மும்பை நகரில் 1952 ஆம் ஆண்டில் இருந்து இயங்கிவரும் இந்த உணவகம் தற்போது சென்னையிலும் பல கிளைகளை தொடங்கியுள்ளது. 65 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்தஉணவகத்தில் வடஇந்திய உணவுகள் கிடைக்கும். மேலும் சாட் வகைகள் இங்கு பிரபலம். சென்னை கிளை உணவகங்களில் பம்பையா பானிபூரி, பன்னீர் டீக்கா, பன்னீர் த்ரீ பெப்பர், டீக்கா ஹர மசலா பிரியாணி, குல்பி பலுடா, மசலா சாய் உள்ளிட்டவை கிடைக்கும் என்று நிர்வாகிகள் கமலேஷ் மூல்சந்தானி, மனோஜ் மூல்சந்தானி ஆகியோர் தெரிவித்தனர்.