tamilnadu

அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு

சென்னை, ஜூன் 18- முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் சென்னை உள்ளிட்ட பகுதியிலுள்ள அம்மா உணவகங்களில் ஜூன் 30ந் தேதி வரை விலையில்லாமல் உணவு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தர விட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்  குறிப்பில், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும்  முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகங்களில் விலையில்லாமல் உணவு வழங்க  முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், முதியோர், நோயுற்றோர் மற்றும் ஆதர வற்றோர் நலன் கருதி சமுதாய உணவுக்கூடங்கள் மூலம் சமையல் செய்து வீடு தேடி சென்று உணவு  வழங்கும் திட்டத்தை வலுப்படுத்தவும் உத்தர விட்டுள்ளார். இந்த நடைமுறை 19 ஆம் தேதி முதல்  30 ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என்று  கூறப்பட்டுள்ளது.