tamilnadu

img

காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய மீனவர்கள் முடிவு

இலங்கை கடற்படையைக் கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அவசர கூட்டத்தில் முடிவு.
   நேற்று 01.08.2024 அன்று இலங்கை ரோந்து கப்பல் மோதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மலைச்சாமி என்ற மீனவர் உயிரிழந்தார் இதனைக் கண்டித்து நேற்று மீனவர்கள் கருப்பு கொடிகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது உடலைத் தமிழ்நாடு கொண்டுவரும் வரையிலும் போராட்டம் நீடிக்கும் எனவும் அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து இலங்கை கடற்படையைக் கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அவசரக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.