tamilnadu

img

சென்னை பெரம்பூரில் முதல் அறிவியல் பூங்கா

சென்னை, ஆக. 29- விண்வெளியில் மிதப்பது போன்ற சுவாரஸ்ய அனுபவங்களை அளிக்கும் அறிவியல் பூங்கா ஒன்று சென்னையில் அமைக்கப்பட்டு வரு கிறது. இது பயன்பாட்டுக்கு வந்தால் மாண வர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் ஆச்சரி யத்தில் ஆழ்ந்து விடுவார்கள். அறிவியல் சார்ந்த பல்வேறு அம்சங்களுடன் அமைக்கப்படுகிறது.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றில் மாணவ, மாணவி களுக்கு ஆர்வத்தை தூண்டும் அறிவார்ந்த புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளவும் வசதி யாக அறிவியல் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இதை ஸ்டெம் பார்க் என்று அழைக் கின்றனர். மேற்சொன்ன நான்கு பிரிவுகளின் ஆங்கில பெயர்களின் சுருக்கமே ஸ்டெம் என்பது  கவனிக்கத்தக்கது. 

தமிழில் அறிவியல் பூங்கா என்று எளிமையாக சொல்லலாம்.

இதில் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் போகும் விஷயம் விண்வெளி சார்ந்த விஷயங்கள் தான். உள்ளே சென்றதும் விண்வெளியில் மிதப்பது போன்ற அனுபவம், 

சுற்றிலும் கோள்கள் சுற்றி வரும் காட்சி கள், இங்குமங்கும் சுற்றி வரும் செயற்கைக் கோள்கள், மிதக்கும் விண்வெளி நிலையம், நட்சத்திர கூட்டங்களை காண உதவும் டெலஸ் கோப் ஆகிய விஷயங்களை கற்பனை செய்து பார்க்கலாம்.

அறிவுப் பசியை போக்குவது மட்டும் இன்றி, குழந்தைகளுக்கு புதுவித அனுபவத்தையும் அளிக்கும். குறிப்பாக இஸ்ரோவின் சந்திரயான், மங்கள்யான் உள்ளிட்ட செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட்கள் எப்படி செயல்படுகின்றன, உள்ளிருக்கும் தொழில்நுட்ப அம்சங்கள் என்னென்ன போன்றவற்றுக்கு மிகவும் நுணு க்கமான முறையில் விளக்கம் அளிக்கின்றனர். 

இதுதவிர ரோபோ கார்கள், மினி ஹூம னாய்டுகள் ஆகியவற்றை கண்டும், பயன் படுத்தியும் பார்க்கலாம்.

இதற்கென பிரத்யேகமாக கணினி ஆய்வகம் ஒன்று அமைக்கப்படுகிறது. 

இத்தகைய அனுபவங்களை வழங்கும் வகை யில் சென்னை அறிவியல் பூங்கா அமைக்கப்படு கிறது. இதற்கு ‘முரசொலி மாறன் பூங்கா’ என்று  பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடு களை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வரு கிறது.

ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் பெரம்பூர். இந்தபூங்காவில் அறிவியல் சார்ந்த சிக்கலான கோட்பாடுகளை மிகவும் எளிமையாக விளக்கி விடுவர். மேலும் புதிய தொழில்நுட்பங்கள், பொறியியல் சார்ந்த விஷயங்கள், கணிதப் பயன்பாடுகள் உள்ளிட்டவற்றையும் கண்டு மகிழலாம்.

இத்தகைய முன்னெடுப்புகள் அறிவியல் மீதான மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும். குறிப்பாக ஐஐடி, என்ஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு கதவுகளை திறந்துவிடும். இதுதொடர்பான வழிகாட்டு தல்களும் இடம்பெறவுள்ளன. இவ்வளவு சிறப்பு கள் கொண்ட அறிவியல் பூங்கா அடுத்த இரண்டு மாதங்களில் திறக்கப்படும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.