tamilnadu

முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் தீ விபத்து

திருநெல்வேலி, ஏப்.10 -களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அரியவகை மூலிகைகள் பல உள்ளன. இங்கு களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளது. இந்த காட்டில்புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன. வெயில் தற்போது கொளுத்தி வருவதால் அந்த வெப்பம் தாங்காமல் மலைப் பகுதியில் அடிக்கடி தீப்பற்றி எரிகிறது.திங்கட்கிழமை இரவு முண்டந்துறை வன சரகத்திற்குட்பட்ட பாண்டியன் கோட்டை பகுதியில் தீ பிடித்ததால்அங்குள்ள புல் பூண்டுகள் எரிகின்றன. தீ கொழுந்து விட்டு எரிவதால் வனத்துறையினர் போராடி தீயை அணைக்க வேண்டிய நிலையில் உள்ளனர். தீ விவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;