சென்னை, மார்ச் 29- தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற் கான வேட்புமனு தாக்கல் மார்ச் 20 அன்று துவங்கி 27ஆம் தேதி முடிவடைந்தது.
தேர்தலில் போட்டியிட 238 பெண்கள் உட்பட மொத்தம் 1,745 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். மார்ச் 28 அன்று நடந்த வேட்பு மனுக்கள் பரிசீலனையில் 652 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதிக பட்சமாக கரூரில் 56, நாமக்கல்லில் 48, கோவையில் 44, ஈரோட்டில் 42, தென் சென்னையில் 41 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. குறைந்த பட்சமாக தஞ்சாவூர், காஞ்சிபுரத்தில் தலா 13 மனுக் களும், திருவள்ளூர் (தனி) தொகுதியில் 14 வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய் யப்பட்டன.
விளவங்கோடு
அதேபோல விளவங்கோடு சட்ட மன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 22 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதில் 8 பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 13 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று (மார்ச் 30) மாலை 5 மணி வரை மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்பதால், அதன்பிறகு, இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தமிழக தேர்தல் அதிகாரி வெளியிடுகிறார்.