tamilnadu

img

அனைவருக்கும் கொரோனா பரிசோதனை முன் களப்பணியாளர்கள் போராட்டம்

சென்னை, ஜூலை 15- கொரோனா ஒழிப்பு பணியில்  ஈடுபட்டுள்ள முன்களப்பணியாளர் கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி, ஊராட்சிகளில் உள்ள துப்பு ரவு தொழிலாளர்கள், கொரோனா ஒழிப்பின் முன்கள வீரர்ககளாக பணியாற்றுகின்றனர். இந்த முன்  கள வீரர்களுக்கு ஒரு மாத ஊதியம்  சிறப்பூதியமாகவும், தொற்று ஏற் பட்டால் இழப்பீடாக 2 லட்சம் ரூபா யும், உயிரிழந்தால் 50 லட்சம்  ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில்  ஒருவருக்கு அரசு வேலையும் வழங்  கப்படும் என்று தமிழக அரசு அறி வித்து. ஆனால் அதனை நடை முறைப்படுத்தாமல் உள்ளது. இந்நிலையில் முன்கள வீரர்க ளின் கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி ஊழியர் சம்  மேளனம் சார்பில் ஜூன் 13-15 தேதி களில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதன் ஒருபகுதியாக சென்னை மற்றும் புறநகர் உள்ளாட்சி ஊழியர் சங்கம் (தென்சென்னை) சார்பில் பல்லா வரம், செம்பாக்கம், பூந்தமல்லி நக ராட்சிகள், திருநீர்மலை, பெருங்க ளத்தூர் பேரூராட்சிகள், ஊராட்சி கள் என சுமார் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு அறிவித்த பணப்பயன் களை வழங்க வேண்டும், பாது காப்பு உபகரணங்களை தர வேண்டும், குறைந்தபட்ச கூலியாக  ஒரு நாளைக்கு 600 ரூபாய் வழங்க  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் முழக்கமிட்டனர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, பொருளா ளர் நடராஜன், சம்மேளனக்குழு உறுப்பினர் சி.முருகேசன் உள்ளிட்  டோர் கலந்து கொண்டனர்.