tamilnadu

img

நீட் நுழைவுத் தேர்வுக்கான கட்டணம் உயர்வு

நீட் தேர்வு கட்டணத்தை ரூ.100ஆக உயர்த்தியுள்ளதாக தேசிய தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.  

ஜூலை 17 ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வுகள் நடைபெறும் என்றும், ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கி மே 7 ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வுக் கட்டணத்தை தேசிய தேர்வு முகமை உயர்த்தி இருக்கிறது.  

அதன்படி கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் நீட் தேர்வு கட்டணம் ரூபாய் 100 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கான ரூ. 1,500லிருந்து ரூ. 1,600ஆக உயர்ந்துள்ளது. இடபுள்யூஎஸ், ஓபிசி பிரிவினருக்கு ரூ. 1,400லிருந்து ரூ. 1,500 ஆக உயர்ந்துள்ளது. பட்டியலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரூ.800லிருந்து ரூ.900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  

மேலும் ஜிஎஸ்டி மற்றும் சேவைக்கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும் என தேசிய தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.

;