சிதம்பரம், ஜூலை 9- கடலூர் மாவட்டம் புவ னகிரியில் இந்திய தொழிற் சங்க மையம், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய ஜனநாய வாலிபர் சங்கம், மாதர்சங்கம், இந்திய மாண வர் சங்கம், தமிழநாடு கரும்பு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் புவனகிரி ஒன்றியம் சார்பில் நெய்வேலி என்எல்சி நிர்வா கத்தை கண்டித்து கரும்பு விவசாயிகள் சங்கத் தலை வர் ஆதிமூலம் தலைமை யில் வேன் பிரச்சாரம் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் ஆறுமுகம், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மாத வன், துணைத் தலைவர்கள் ராமச்சந்திரன், சதானந்தம் புவனகிரி ஒன்றியச் செய லாளர் காளி.கோவிந்தராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிரச்சாரத்தில் என்எல்சி நிர்வாகம் 3ஆவது சுரங்கத் திற்கு விவசாயிகளின் அனு மதியின்றி நிலங்களை எடுக்கக்கூடாது, என்எல்சி சார்பில் ஒதுக்கப்படும் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியை கடலூர் மாவட்டத்திற்கு முக்கியதுவம் கொடுத்து செலவிட வேண்டும், இந்த நிதியில் வீராணம் ஏரி, பெரு மாள் ஏரி, வெலிங்டன் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார வேண்டும், தமிழ கம் மற்றும் கடலூர் மாவட்ட மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும், என்எல்சி வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளி களுக்கு 4 விழுக்காடு இட ஒக்கீட்டை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.