tamilnadu

img

விவசாய சட்ட மசோதாக்களுக்கு எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவினர் வியாழனன்று சென்னையில் விவசாய சட்ட மசோதாங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விவசாய சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையிலும் அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய சட்ட மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளது. இதனை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை வைத்து முழக்கமிட்டனர். இதற்கிடையில், டெல்லி அமிர்தசரஸ்  நெடுஞ்சாலையில் வியாழனன்று மதியம் 12 மணி நுதல் மாலை 4 மணி வரை பல விவசாய அமைப்புகள் விவசாய சட்ட மசோதாக்களை எதிராக போராட்டம் நடத்தப்படுவதாக அறிவித்திருந்தனர். பஞ்சாப்பிலும் போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த போராட்டமானது 46 இடங்களில் இன்று நடைபெறுகிறது. இந்த போராட்டத்தின் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.