tamilnadu

img

பலா, முந்திரிக்கு புவிசார் குறியீடு விவசாயிகள் மகிழ்ச்சி

பலா, முந்திரிக்கு புவிசார் குறியீடு விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தில் கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் அதிக அளவில் பலா, முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. முந்திரி பருப்பு உற்பத்தி , பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி அதிக அளவில் நடைபெற்று வருகிறது . உலக அளவிலும், தேசிய அளவிலும் பண்ருட்டி முந்திரி உற்பத்தி மற்றும் விற்பனை யில் முக்கிய இடம் பிடித்துள்ளது. உலக முந்திரி சந்தையில் பண்ருட்டி முதன்மை இடத்தி லும், தமிழகத்தின் மிகப் பெரிய முந்திரி சந்தையாகவும் கடலூர் அமைந்துள்ளது. தனித்துவம் மிக்க பண்ருட்டி பலா மற்றும் முந்திரிக்கு புவிசார் குறியீடு வழங்கக் கோரி ஒன்றிய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டது. பல்வேறு கட்ட ஆய்வுக்குப் பின்னர் புவிசார் குறியீடு வழங்கியது. பண்ருட்டி பலா மற்றும் முந்திரிக்கு சர்வதேச அளவில் சந்தைப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், கடலூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வாகன சாகசம்  2 பேர் கைது

கிருஷ்ணகிரி ஏப்.4 –  ஓசூர் பழைய பேருந்து  நிலையம் சீதாராம்மேடு பகுதி தேசிய நெடுஞ்சாலை தினமும் நாள் முழுவதும் கனரக வாகனங்கள் உள் ளிட்ட அனைத்து வாகனங் களும் சென்று வரும் போக்கு வரத்து நெரிசல் மிகுந்த பகுதி யாகும். இந்த சாலையில் வியாழன்று 2 வாலிபர்கள் வாகன ஓட்டிகளுக்கு இடை யூறாக பைக் முன் சக்கரத் தைதூக்கிக் கொண்டு ஓட்டி வீலிங் சாகசத்தில் ஈடுபட் டனர். அங்கு வந்த ஓசூர் நகர காவல் துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இரு வரையும் மடக்கிப் பிடித் தனர். விசாரணையில், ஓசூர் மத்தம் பகுதியை சேர்ந்த 19 வயது நிரம்பிய இம்ரான்,  பத்தலப்பள்ளியைசேர்ந்த உம்ரேஷ்  ஆகியோரை கைது செய்து இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.