tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மாநகராட்சி சார்பில் பகுதி சபா கூட்டம்

 'கடலூர், மே 9- கடலூர் நகராட்சிக்குட் பட்ட ஐந்தாவது வார்டு புரு ஷோத்தமன் நகர் பகுதி யில் பகுதி சபா கூட்டம் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நடை பெற்றது. ஐந்தாவது வார்டுக்குட்பட்ட புரு ஷோத்தமன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை, தெருவிளக்கு, சுகா தார வளாகம், உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்ற பொதுமக்கள் வலி யுறுத்தினர்.  புருஷோத்தமன் நகர் பகுதியில் தமிழக அரசு சார்பாக இலவச மனைபட்டா வழங்கு வதற்கு உத்தரவு வர பெற்றுள்ளதாகவும், வடிகால் வாய்க்கால் அமைக்கப்படும்,  ரேஷன் கடை புதுப்பிக்க நட வடிக்கை எடுப்பதாக மேயர் சுந்தரி ராஜா உறுதி யளித்தார். இந்த கூட்டத்  தில் மாநகராட்சி ஆணை யர் அனு, மாமன்ற உறுப்பி னர் பார்வதி அய்யாசாமி, திமுக மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா, பகுதி துணை செயலாளர் லெனின், மாணவரணி துணை அமைப்பாளர் கே. எஸ்.ஆர்.பாலாஜி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, மே 9- இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக ஐ.பி.எல். நடப்பு சீசனில் எஞ்சியுள்ள போட்டிகளை ஒருவாரத்திற்கு மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்து இருந்தது. இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எல்.போட்டி நடத்தினால் குண்டு வெடிக்கும் என எச்சரித்து டெல்லி கிரிக்கெட் வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானை சேர்ந்த மின்னஞ்சல் போல் உருவாக்கப்பட்டு சேப்பாக்கம் மைதா னத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள தாக கூறுகின்றனர்.

நெல் கொள்முதலுக்கு பணம் வழங்க  விவசாயிகள் சங்கம் கோரிக்கை

ராணிப்பேட்டை, மே 9 -  ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் செயல்படக் கூடிய தேசிய கொள்முதல் நிலை யத்தில் (என்.சி.சி.எஃப்) விவசாயிகளிட மிருந்து நேரடியாக பெறப்பட்ட நெல் மூட்டைகளுக்கு பணம் கிடைக்காமல் விவசாயிகள் மன உளைச்சல், வேதனையில் உள்ளனர். ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளியன்று (மே. 9) வரு வாய் கோட்டாட்சியர் தலைமையில் நடை பெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவ சாயிகளிடமிருந்து நேரடியாக பெறப்பட்ட நெல் மூட்டைகளுக்கு கடந்த 40 நாட்கள் மேலாகியும் பணம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் மன உளைச்சல், வேதனையில் உள்ளனர். பலமுறை அலைந்து திரிந்து மாவட்ட அலுவலகங்கள் உள்ளிட்ட முறையான தீர்வு கிடைக்கப் பெறவில்லை. இந்நிலை யில் இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உரிய தீர்வு காண வேண்டும் என்று மனு அளித்து கோரிக்கை வைத்துள்ளது.