tamilnadu

எக்ஸ்பிரஸ் ரயில் வேகம் அதிகரிப்பு சென்னை-மதுரை பயண நேரம் குறைகிறது

 சென்னை, ஜூன் 26- சென்னை-மதுரை இடையே தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை வருகிற 1 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இதில்  சென்னை - மதுரை இடையே சுமார் 10 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 5 முதல் 30 நிமிடம் வரை  பயண நேரம் குறைய உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் இடத்தை  அடையும் நோக்கத்திலும், தாமதமாகக் செல்வதை தவிர்க்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய கால அட்டவணைப்படி சென்னை-மதுரை இடையே  பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றின் பயண நேரம் 7 மணி 50 நிமிடங்களாக குறைக்கப்படவுள்ளது. தற்போது சென்னை-மதுரை இடையே 495 கி.மீ. தூரத்தை  பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் 8 மணி 5 நிமிடங்களிலும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் 8 மணி 20 நிமிடங்களிலும் அடைகிறது. சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் 20 நிமி டங்கள் முன்னதாகவும், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் 10  நிமிடங்கள் முன்னதாகவும் சென்றடையும் வகையில் வேகப்ப டுத்தப்படுகிறது. நெல்லை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ்  ரயில்கள் 5 நிமிடங்கள் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் வருகிற 1 ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட உள்ளது. நெல்லை எக்ஸ்பி ரஸ் ரயில் இரவு 7.50 மணிக்கும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 8.10 மணிக்கும் புறப்படும். சென்னை-மதுரை இடையே இரட்டை பாதையுடன் மின்மய மாக்கல் முடிந்து சுமார் 15 மாதங்களுக்கு பிறகு ரயில் பயண  நேரம் குறைய உள்ளது.