tamilnadu

ஆன்லைன் அபராதத்திலிருந்து விலக்கு: ஆட்டோ தொழிலாளர்கள் கோரிக்கை

சென்னை, ஆக. 31 - ஆன்லைன் அபராதம் விதிப்ப தில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று ஆட்டோ தொழிலா ளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை போக்கு வரத்து காவல்துறையினர் நிறுத்தி சோதனையிட்டு வந்தனர். வாகனங்க ளுக்கான ஆவணங்கள் போதிய அளவிற்கு இல்லையென்றால் அபரா தம் விதித்து வந்தனர். ஆட்டோக்க ளுக்கும் இதே முறையில்தான் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இதனை மாற்றி தற்போது, ஆட்டோ செல்லும்போதே கேமிராக்கள் மூலம் படம் எடுத்து அல்லது செல்போன்கள் மூலம் படம் எடுத்து ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் பல இடங்களில் விதிமுறைகள் மீறி, ஆன்லைன் அபரா தம் விதிக்கப்படுகிறது. அபராதம் விதிக்கப்பட்டது தெரியாமலேயே ஆட்டோக்களை ஓட்டுநர்கள் இயக்கி வருகின்றனர். வட்டார போக்கு வரத்து அலுவலக பணிகளுக்கு, தகு திச்சான்று (எப்சி) பெறச் செல்லும் போதுதான் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதே ஓட்டுநர்களுக்கு தெரி கிறது.

அதாவது, பலமுறை விதிக்கப் பட்ட அபராத கட்டணத்தை முழுமை யாக, ஒரே தவணையாக செலுத்த வேண்டி  உள்ளது. இதனால் ஆட்டோ தொழிலாளர்கள் மிகுந்த அதிர்ச்சிக் கும், மன வேதனைக்கும் உள்ளாகி றார்கள். வட்டார போக்குவரத்து அலு வலகத்தில் நடைபெற வேண்டிய பணிகள் தடைபடுகிறது. ஓட்டுநர்க ளின் வாழ்வாதாரமும் பாதிக்கப் படுகிறது. மேலும், செய்யாத குற்றத் திற்கும் பல நேரங்களில் அபராதம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

பொதுப்போக்குவரத்தில் ஆட்டோக்கள் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன. குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்த ஆட்டோ தொழிலாளர்கள் கடும் சிரமப் படுகின்றனர். இத்தகைய சூழலில், வருமானத்தின் ஒரு பகுதியை ஆன் லைன் அபராதத்திற்காக செலுத்த வேண்டியுள்ளது.

எனவே, தமிழகம் முழுவதும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஆன் லைன் அபராதம் விதிப்பதில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும். சாலையில் சோதனையிடும் போது தவிர்க்க முடியாத நிலையில் உள்ள ஆட்டோவிற்கு மட்டும் அபராதம் விதிக்க வேண்டும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை ஆணை யாளர் அலுவலகத்தில், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் பொதுச் செயலாளர் எம்.சிவாஜி அளித்த மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.