எண்ணூர் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணி தீவிரம்
சென்னை,ஆக.10- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, புழல் ஏரிகள் நிரம்பினால் திறக்கப்படும் உபரி நீரானது, பல கி.மீ., தூரம் பயணித்து, எண்ணூர் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கிறது. இங்கு கடல் அலை பெருக்கு காரணமாக, அடிக்கடி மணல் மேடாக குவிந்து நீர்வரத்து பாதை சுருங்கி வெள்ள நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
கடலில் கலக்க முடியாமல் உபரி நீர் தேங்கிய நிலையில், நீர் வரத்து குறைவாக இருந்த பக்கிங்காம் கால்வாயில் பின்னோக்கி பாய்ந்து எண்ணூர், எர்ணாவூர், திருவொற்றியூர் மேற்கு, ஆர்.கே.நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகும் அபாயம் அவ்வப்போது ஏற்படுகிறது. இதனால் முகத்துவாரம் அகலமாக்குவதற்காக ரூ.135 கோடி மதிப்பீட்டில் கரை களை பலப்படுத்தி நட்சத்திர கான்கிரீட் கற்களாலான இரு தூண்டில் வளைவுகள் அமைக்கும் பணி பொதுப்பணித் துறையில் நடைபெற்று வருகிறது.
எண்ணூர் முகத்துவாரத்தை தூர்வாரும் பணி மூலம் வினாடிக்கு 1.25 லட்சம் கன அடி உபரி நீரை, கடலுக்கு அனுப்ப லாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். இதில் கடல் பகுதியில் இருபுறமும் 4 முதல் 12 டன் எடையுள்ள நட்சத்திர கான்கிரீட் கற்கள் கொட்டி, வடக்கு பக்கம் 1,640 அடி தூரத்திற்கு, தெற்கு பக்கம் 1,312 அடி ஆழத்திற்கு பிரமாண்ட தூண்டில் வளைவுகள் கட்டமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக மோசடி
சென்னை,ஆக.10- கொடுங்கையூர் மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் ஷர்மிலி (40).இவர் தனது மகளை கல்லூரியில் சேர்வதற்காக, தனக்கு அறிமுகமான புளியந்தோப்பு வ.உ.சி நகரை சேர்ந்த காவியா ராணி (25) என்பவரிடம் உதவி கோரியுள்ளார். அவர், தனக்கு தெரிந்த நபர் மூலம், உனது மகளுக்கு பிரபல கல்லூரியில் சீட் வாங்கி தருகிறேன். அதற்கு கமிஷனாக ரூ.1.30 லட்சம் கொடுக்க வேண்டும், என கூறியதாக கூறப்படு கிறது. இறுதியாக, ரூ.1.15 லட்சம் தருவதாக ஷர்மிலி சம்மதித்து, அந்த தொகையை காவியா ராணியிடம் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் கொடுத்துள்ளார். ஆனால், கல்லூரியில் சீட்டு வாங்கி தராமல், காவியா ராணி ஏமாற்றி யுள்ளார். இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத் தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வெள்ளியன்று காவியா ராணியை கைது செய்த னர்.
தாம்பரம் அருகே சாமி சிலை திருட்டு
தாம்பரம், ஆக. 10- தாம்பரம் அருகே கஸ்பாபுரம் கிராமத்திலிருந்த அம்மன் கோவில் சிலை திருடு போனது.
தாம்பரம் அருகே அகரம் தென் ஊராட்சியில் கஸ்பா புரம் என்ற இடத்தில் கோலாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் வெள்ளியன்று இரவு 7 மணிக்கு பூஜை செய்துவிட்டு சனிக்கிழமை காலை மீண்டும் பூஜை செய்ய முற்பட்டபோது அப்போது சாமி சிலை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த விவகாரம் கிராமத்தில் காட்டுத்தீ போல பரவியது. பொதுமக்கள் அங்கு குவிந்த னர். தற்போது சேலையூர் போலீசார் அங்குப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக கிராம மக்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.