tamilnadu

img

வண்ணாரப்பேட்டை போராளிகளை உற்சாகப்படுத்திய புதுவை சப்தர்ஹஷ்மி கலைக்குழுவினர்

சென்னை, மார்ச் 4 - சென்னை வண்ணாரப்பேட்டை லாலாகுண்டா பகுதியில் குடியு ரிமை சட்டத்தை எதிர்த்து போராடி வரும் மக்களை  புதுவை சப்தர்ஹ ஷ்மி கலைக்குழுவினர் தேசபத்தி பாடல்களை பாடி மகிழ்வித்தனர். சென்னை வண்ணாரப் பேட்டை தொடர் போராட்டத்தில் கடந்த 20  நாட்களாக ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் மத்திய பாஜக அரசின் ஜனநாயக விரோத  என்ஆர்சி, என்பிஆர், சிஏஏ சட்டத்தை எதிர்த்து போராடிவருகின்றனர். இந்நிலையில் திங்களன்று மாலை புதுவை சப்தர்ஹஸ்மி கலைக் குழுவினர்  தங்கள் கலை நிகழ்ச்சியை நடத்தினர். தேசபக்த மற்றும் நையாண்டி பாடல்களாலும் பேச்சாலும் கூட்டம் முழுவதையும் வசியப்படுத்தினர். பாடகி உமா மற்றும் செல்வம் தங்களின் கலைத்திறனை காட்டினர். ஒரு பாடலை ஒன்ஸ் மோர் ஒன்ஸ் மோர் எனக் கூவி மூன்று முறை பாடிய பின்னும் அவர்களை மேடையிரங்க விடாமல் ஆர்ப்பரித்தனர்.மக்களின் நெகிழ்ச்சி கண்டு ஒருங்கிணை ப்பாளர் செல்வம் ஒருகட்டத்தில் ஆனந்த கண்ணீர் வடித்தார்.  அந்த பாடலின் சில வரிகள்

இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு
தமிழே எங்கள் மொழியாகும் தன்மானம் எங்கள் உயிராகும்
யாரடா சொன்னது
எங்களை அந்நியனென்று
யாரடா சொன்னது
சுதந்திரப்போரில் உயிரை கொடுத்து
முன்னோர்கள்
சுதந்திர போரில் துன்பம் அடைந்தது முஸ்லீம்கள்
மறந்து விட்டார்கள் உண்மையை
மறைத்து விட்டார்கள்
இதுதான் துரோகமா? நாங்கள்
செய்த பாவமா?
யாரடா சொன்னது நாங்கள்
அந்நியனேயென்று யாரடா
சொன்னது
 

இந்த பாடலை மூன்று முறை பாடினார்கள் மண்ணடி ஷாஹீன் பாக்கிற்கு நீங்கள் வரவேண்டும் என்று இந்த கலைக்குழுவினரை நிர்பந்தப் படுத்தினார்கள்.  இதனைத் தொடர்ந்து மண்ணடி சென்ற இவர்களை காவல்துறை யினர் ‘வாத்தியங்கள் இசைக்கக் கூடாது, பாட்டு மட்டும் பாடலாம்’ என்று தடைவிதித்தனர். இருந்தாலும் மண்ணடியில் இசைக்கருவிகள் இல்லாமல் மத்திய அரசை கண்டித்து பாடல்களை பாடி மக்களை உற்சாகப்படுத்தினர்.  தங்கள் சொந்த செலவில் பாண்டியில் இருந்து வந்து மக்கள் போராட்டத்தை உற்சாகப் படுத்தி இரவு பயணத்தில் செல்லும் தோழர்க ளின் அர்ப்பணிப்பை பொதுமக்கள் பாராட்டினர்