tamilnadu

img

நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் உண்ணாவிரதம்

பருவகால ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி செவ்வாயன்று (ஜூலை 30) சென்னையில் நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள 1300க்கு மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். 2013-16 ஆம் ஆண்டுகளில் பணியாற்றிய பருவகால ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இ-ஆபிஸ் என்ற பெயரில் நிரந்தர தன்மையுள்ள 800க்கும் மேற்பட்ட நிரந்தர பணியிடங்கள் அழிப்பதை கைவிட வேண்டும் என்பன  உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இந்த உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தொடங்கி வைத்தார். சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.குமார், மாநில பொதுச்செயலாளர்  ஆர்.புவனேஸ்வரன், பொருளாளர் எம்.ஏழுமலை உள்ளிட்டோர் பேசினர்.