tamilnadu

சமூக மாற்றத்தில் ஆர்வமுடையோருக்கு பணிவாய்ப்பு

சென்னை, ஏப். 9-அசிம் பிரேம்ஜி ஃபவுண்டேஷன் கல்வியில்ஈடுபாடும் சமூக மாற்றத்தில்ஆர்வமும் கொண்டவர்களுக்குப் பணிவாய்ப்பினை வழங்குகிறது. ‘அஸோஸியேட்ஸ், துணையாசிரியர்’, ‘பள்ளி ஆசிரியர்கள்’ மற்றும் ‘ஆசிரியர் பயிற்றுனர்கள் ’என தகுதிக்கேற்பபணி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.நிறுவனத்தின் பெரும்பகுதி பணியானது ‘அரசுப்பள்ளி ஆசிரியர்களின் திறன் மேம்பாடு’என்பதைச் சுற்றியே இருக்கும். இரண்டு வருட ஆசிரியர் பணி அனுபவம் கொண்ட இளநிலை அல்லது முதுநிலைப் பட்டதாரிகள்,‘ஆசிரியப் பயிற்றுனர்’ பணிக்கு அசிம் பிரேம்ஜி ஃபவுண்டேஷனின் மாவட்டக் கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்கலாம். கல்விசார்,அரசு சாரா நிறுவனங்களில் சீரிய களப்பணிஅனுபவம் கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அரசுமழலையர் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களோடு இணைந்து பணியாற்றி அவர்களின் தொழில்சார்திறன்களை மேம்படுத்த பணியாற்றவேண்டும்.இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 15 ஆகும். ஊதியம் ரூ.29 ஆயிரம் ஆகும். மேலும் விவரங்களுக்கு றறற.றறற.யணiஅயீசநஅதகைடிரனேயவiடிn.டிசப/உயசநநச-டளைவ இணைப்பையும், அஸோஸியேட்ஸ்கள், துணையாசிரியர்கள் பணி குறித்த தகவல்களுக்கு றறற.யணiஅயீசநஅதகைடிரனேயவiடிn.டிசப/உயஅயீரள இணைப்பையும் பார்க்கவும்.

;