tamilnadu

பேருந்திலிருந்து விழுந்து ஊழியர் பலி

 பூந்தமல்லி, ஆக.6-  பூந்தமல்லியில் அரசுப் பேருந்து பணிமனை இயங்கி வருகிறது. இங்கு தினந்தோறும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பணிமனை யில் அரசு பேருந்துகளை பராமரிக்கும் பணியில் ஊழி யர்கள் ஈடுபட்டு வருகின்ற னர்.  இந்நிலையில் செவ்வாய ன்று (ஆக.6) அதிகாலை இங்கு பணியில் ஈடுபட்ட வேலூர் தக்கோலத்தை சேர்ந்த வெங்கடேசன் (56) என்ற ஊழியர் பேருந்து முன் பகுதியில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்டதும் சக ஊழியர்கள் அவரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரி ழந்தார்.