சிதம்பரம், ஆக.9- கடலூர் மாவட்டம் சிதம்பரம் பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஓய்வு பெற்றவர்கள் ஒருங்கிணைந்து பொதுத்துறை நிறுவனத்தை காக்கும் வகையில் 3 லட்ச ரூபாய் நிதி திரட்டி பாரத் பைபர் என்னும் தொழில் நுட்பத்தில் அதிவேக இண்டர்நெட் வசதியை செய்துள்ளனர். இந்த சேவையால் வீடுகளில் பயன்படுத்தி வந்த பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் வசதியில் 50 முதல் 100 எம்பி பிஎஸ் வேகத்துடன் இணையதள சேவை கிடைக்கும் வகை யில் அமைத்துள்ளனர். இச்சேவை மூலம் அனைவரிடத்தி லும் இலவசமாக பேசிக் கொள்ளலாம், இணையதளத்தை யும் பயன்படுத்திக் கொள்ளலாம். தொலைக்காட்சிகளை இல வசமாக பார்க்கக் கூடிய இந்த சேவையை கடலூர் மாவட்ட தொலைதொடர்பு பொது மேலாளர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட தொலைதொடர்பு துணை மேலாளர் சாந்தா, துணை பொது மேலாளர் மதுரை, உதவி திட்ட மேலாளர் ஆனந்தன், உதவி பொதுமேலாளர் அனந்த லட்சுமி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க நிர்வாகிகள் கிருஷ்ண குமார், கலியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.