சென்னை, ஜூலை 30 - மாநகராட்சி இடங்களில் கட்டப்படும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் மாநகராட்சி ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படை யில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சென்னை மாநகராட்சி பகுதிக்குழு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரிப்பன் வளாகத்தில் உள்ள சென்னை மாநக ராட்சி செங்கொடி சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் பகுதித் தலைவர் பி.சீனிவாசலு தலைமை தாங்கினார். வட சென்னை மாவட்ட இணைச் செயலாளர் விஜயகுமார் துவக்கிவைத்தார். பகுதிச் செயலாளர் வை.சிவக்குமார் வேலை அறிக்கையையும், பொருளாளர் ச.ஜீவன் வரவு செலவு அறிக்கையும் சமர்பித்தனர். மாவட்டத் தலைவர் ம.அந்தோணிசாமி, செயலாளர் ஜெ.பட்டாபி ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.
புதிய நிர்வாகிகள்
பகுதித் தலைவராக பி.சீனிவாசலு, செயலாளராக வை.சிவக்குமார், பொருளாளராக ச.ஜீவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.