tamilnadu

img

கேங் மேன்களை கள உதவியாளராக மாற்றக் கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கேங் மேன்களை கள உதவியாளராக  மாற்றக் கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கேங்மேன் பதவியை கள உதவியாளர் பதவியாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் திருமங்கலம் மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில்  சென்னை மேற்கு கிளை தலைவர் எஸ்.தசரதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து வட்டங்களிலும் கேங்மேன் பதவிக்கான அனுமதி வழங்க வேண்டும், ஏற்கெனவே தேர்வு செய்து பணியாணை வழங்கப்படாமல் உள்ள 5,000 கேங்மேன் பணியாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும், சொந்த உருக்கு இடமாற்றம் அனைவருக்கும் வழங்க வேண்டும், 1.12.2019 முதல் வழங்கவேண்டிய 6 விழுக்காடு ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும், இடமாற்றம் பெற்ற கேங்மேன் பணியாளர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்ய வேண்டும். கேங்மேன் பணியாளர்கள் அனை வருக்கும் சீருடை வழங்கி, சலவைப்படி வழங்க வேண்டும், கேங்மேன் பணி யாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உப கரணங்கள் வழங்க வேண்டும், மேற்கு வட்டத்தில் களப்பணி ஊழியர்களின் முதன்மை பட்டியலை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் தமிழ்நாடு பவர் இன்ஜினியரிங் அசோசியேஷன் மாநில பொதுச்செயலாளர் கே.அருள்செல்வன்,  மாநிலச் செயலாளர் ஆர்.ராஜேஷ் கண்ணா, திட்ட தலைவர் பி.எஸ்.பார்த்தசாரதி, மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணை பொதுச்செயலாளர் கே.ரவிச்சந்திரன், திட்ட செயலாளர் எஸ்.எஸ்.கணேஷ்ராவ், பொருளாளர் சி.அஜிகுமார் ஆகியோர் பேசினர்.