சென்னை, பிப்.18- மின்வாரிய ஒப்பந்த தொழிலா ளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், அனைத்து ஒப்பந்த தொழி லாளர்களுக்கும் ஒப்பந்தப்படி 380 ரூபாய் கூலி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி வடசென்னை, காஞ்சிபுரம் உட்பட பல இடங்களில் செவ்வாய்க்கி ழமை (பிப்.18) ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அனல் மின் நிலை யங்களில் மின் உற்பத்தியில் நேரடி யாக ஈடுபடும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும், மின்துறை அமைச்சர் அவர்கள் அளித்த வாக்குறுதி யின்படி அனைத்து ஒப்பந்த தொழி லாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவர் ஜெயவேல் தலைமை தாங்கினார். சிஐடியு திரு வள்ளூர் மாவட்ட துணைத் தலை வர் விநாயகமூர்த்தி, கிளைச் செய லாளர் சுந்தரம் , வெங்கடேசன், தலை வர் வெங்கட் ஐயா பொருளாளர் ரவி , அருள் நாதன் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்துகொண்ட னர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை மின்வாரிய அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்திற்கு வட்ட இணை செயலா ளர் ஏ.வெங்கடேசன் தலைமை வகித்தார்.வட்ட பொருளாளர் ஜி. படவேட்டான், வடக்கு கோட்ட தலைவர் கே.சங்கர், தெற்கு கோட்ட தலைவர் பி.கேச வன்,தெற்கு கோட்ட செயலாளர் கே. பாபு முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து சிஐடியு முன்னாள் மாவட்ட தலை வர் எ.வாசுதேவன் பேசினார். மாநில செயலாளர் இ.முத்துகுமார் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். திருத்தணி கோட்ட பொறுப்பாளர் எஸ். சஞ்சீவி நன்றி கூறினார்.