வாக்கு எண்ணிக்கை ஏற்பாடு தேர்தல் அதிகாரி ஆலோசனை
சென்னை, மே 9- தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்தது. 39 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் பொதுப்பணி மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட்டு கேமராக்கள் தொடர்ந்து இயங்குவது குறித்தும் உறுதி செய்ய வேண்டும் என ஏற்கனவே தலைமைத்தேர்தல் அதிகாரி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் மற்றும் அதற்கான பயிற்சி தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மே 9 அன்று சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
“கோடையில் சிறப்பு வகுப்புகள் கூடாது”
சென்னை,மே 9- கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தமிழக அர சின் தலைமைச் செயலா ளர் சிவ்தாஸ் மீனா தெரிவித் துள்ளார். அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். இத னை அனைத்து மாவட்ட ஆட் சியர்களும் உறுதி செய்ய வேண்டும். வெப்ப அலை வீசுவதால் மாணவ, மாண விகளின் நலன் கருதி சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.