பூந்தமல்லி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எச்சிசிபி நிறுவனம் 60 படுக்கைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. நிறுவன சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ் இந்த உதவி செய்யப்பட்டுள்ளது. கழிவு சேகரிப்பு தொட்டிகளை வழங்கி, நேமத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், முன்மாதிரி கிராம சமுதாயங்களை உருவாக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று நிறுவனத்தின் மண்டல துணைத்தலைவர் தீபக் செந்தில்நாத் தெரிவித்துள்ளார்.