சென்னை,டிச.6- கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் வி.கே.சசிகலா, இளவரசி ஆகியோரை விசாரிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெய லலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரை கொலை செய்து, ஆவணங்கள் கொள்ளைய டிக்கப்பட்டதாக காவல்நிலை யத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்ற த்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.
இதனை ரத்து செய்யக் கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகி யோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்த னர். இந்த மனுவில், ஜெயலலிதா வின் மரணத்திற்கு பின் நடந்த கொள்ளையில், கோடநாடு எஸ்டேட் டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசி கலா, இளவரசிக்குத்தான் தெரியும் எனவும், புலன் விசாரணைக்குழு, வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளவில்லை என்றும் முக்கிய குற்றவாளிகளை தப்ப விட்டு விட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்பு நடை பெற்றது. அப்போது மனுதாரர் சார்பில், இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா ஆகியோரை எதிர்தரப்பு சாட்சியாக விசாரிக்க வேண்டும், என வாதிடப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறி ஞர் வினோத்குமார், கோடநாடு கொலை, கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேல் விசாரணை நடை பெற்று வருகிறது, என்றார். அதை யடுத்து நீதிபதி, அதிமுக பொதுச் செயலாளரான பழனிசாமி தற்போது முதல்வராக பதவியில் இல்லை என்பதால் அவரை எதிர்தரப்பு சாட்சியாக ஏன் விசாரிக்கக்கூடாது என கருத்து தெரிவித்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் டிசம்பர் 6 அன்று தீர்ப்பளிக்கப்பட் டது. நீதிபதி பி.வேல்முருகன் அளித்த தீர்ப்பில், கீழ் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து, நீலகிரி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி மற்றும் வி.கே.சசிகலா, இளவரசி ஆகியோரையும் விசா ரிக்க அனுமதியளித்து உத்தர விட்டார்.