tamilnadu

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை காக்க

சென்னை, ஜூன் 30 - பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீட்கவும், நீர்நிலைகளை பாது காக்கவும் கோரி ஞாயிறன்று (ஜூன் 30) சூழலியல் பெருநடை நடை பெற்றது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சென்னை நகரின் கடைசியாக எஞ்சி யுள்ள இயற்கை ஈரநிலமாகும். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பல்லுயிர் பெருக்கத்தின் தாயக மாகவும், பறவைகள், மீன்கள் மற்றும் ஊர்வனவற்றின் வாழ்விட மாகவும் உள்ளது. 625 வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகள் இங்குள்ள உள்ளன.

இந்த சதுப்பு நிலத்தை சார்ந்து 176 பறவை இனங்கள் உள்ளது. இந்நிலத்தின் பெரும்பகுதி அழிக்கப்பட்டுவிட்டது. அதாவது அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள், சாலைகள், குப்பை கிடங்குகள் என ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சதுப்பு நிலத்தை துண்டு துண்டாக மாற்று தல், பல்வேறு பணிகளுக்கு தற்காலி கமாக பயன்படுத்துதல் போன்ற பணி களை செய்கின்றனர். தற்போது உள்ள சதுப்பு நிலமும் கடுமையாக மாசடைந்து வருகிறது. இதனால் வெள்ளம், பருவநிலை மாற்றம் போன்றவை நிகழ்கிறது.

தென் சென்னை பகுதியின் வடிநிலமாக உள்ள இந்த சதுப்பு நிலம் ராம்சார் தகுதி பெற்றுள்ளது. இந்த சதுப்பு நிலத்தை வனத்துறை கோரி வரும் நிலையில், அதனை உரிமம் மாற்றம் செய்யாமல் அரசு நிர்வாகம் செயல்படுகிறது. சதுப்பு நிலத்தை மேலும் சிதைக்கும் வகை யில் பூங்காக்கள் அமைப்பது பணி களை மேற்கொள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம் ‘நமது நிலம் நமது எதிர்காலம்’ என்ற முழக்கத்தோடு இந்த சூழலியல் பெருநடை நடை பெற்றது.

மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியின் தாளாளர் தாவூத் மியான் கான் இந்த இயக்கத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக் கம், சென்னை யூத் சென்டர், யுனைட், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், சோழிங்கநல்லூர் தொகுதி குடியிருப்போர் சங்கங்க ளின் கூட்டமைப்பின் கீழ் உள்ள சங்கங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள், தொழிற்சங்க தலைவர்கள், ஓய்வூதியர்கள், பெண்கள், மூத்த குடிமக்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சூழலியல் நடையில் பங்கேற்ற னர்.

சென்னையில் இயற்கை சம நிலையை காக்க, பருவநிலை மாற்றத்தை சரி செய்ய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். ஈர நிலங்களை பாதுகாக்க வேண்டும், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மாசடைவதைத் தடுக்க வேண்டும். நீர்நிலைகளை, நீர்வரத்து கால்வாய்களை செப்பனிட்டு பாது காக்க வேண்டும்.

புவி வெப்பமய மாதலை தடுக்கவும், நெகிழி உப யோகத்தை தவிர்க்கவும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினர். சூழலியல் நடையின் இறுதியாக காயிதே மில்லத் கல்லூரியில் உறுதி மொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுற்றுச்சூழல் விழிப்பு ணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் எஸ்.மோகன், செயலாளர் ஆர்.சீனி வாசன், பொருளாளர் எஸ்.சுந்தரராஜன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு களின் தலைவர்கள் பங்கேற்று பேசினர்.