tamilnadu

img

வேலையில்லா திண்டாட்ட எதிரொலி: 8 ஆம் வகுப்பு தகுதி உடைய பணிக்கு குவிந்த பட்டதாரிகள்.

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் மதுரையில் 8ஆம் வகுப்பு தகுதி உடைய கால்நடைத்துறை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு பட்டதாரிகள் குவிந்தனர்.
கால்நடை துறை சார்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் கால்நடைத்துறை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேரடி நியமனம் கடந்த 2015ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த நேர்காணல் ரத்து செய்யப்பட்ட நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக காலம் கொரோனா காரணமாக 2 முறை இந்த நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, நான்காவது முறையாக 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நேர்காணல் ஆனது மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் என கால்நடை துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள சுமார் 47 காலியிடங்களுக்கு சுமார் 8,500 பேர் விண்ணப்பம் செய்ததாகவும் அதில் தகுதியான 6675 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது, தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட நிலையில் அதற்கான நேர்காணல் திங்களன்று  துவங்கியது, 
நாளொன்றுக்கு 1200 பேர் வீதம் ஆறு நாட்கள் இந்த நேர்காணல் நடைபெறும் எனவும் இந்த நேர்காணல் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு கால்நடை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து செய்முறை விளக்கம் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் பொது அறிவு கேள்விகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என கால்நடை துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்தநிலையில் குறைந்த பட்ச கல்வித்தகுதி 8ம் வகுப்பு உடைய நேர்காணலில் பங்கேற்றதில்  அதிக அளவு முதுநிலை இளநிலை பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்த பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சுமார் 6,675 பேரில் 70 சதவீதம் பேர் பட்டதாரிகள் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.