சென்னை, ஜூலை 9 – மின்வாரியம் தர மான சேவை வழங்க காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூலை 9) மாநிலம் முழுவதும் மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
மின்வாரியத்தில் கள உதவியாளர், கணக்கீட்டா ளர், உதவி மின்பொறியாளர், இளநிலை உதவிப்பொறி யாளர் பணியிடங்கள் கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பப் படாமல் உள்ளன. இதனால் ஆரம்ப கட்டப் பணியிடங் களில் 32ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக களப்பணியாளர் கள் கூடுதல் பணிச் சுமை யோடு பணியாற்றுகின்றனர். ஒப்பந்த ஊழியர் முதல் மின்பாதை ஆய்வாளர் வரை தினம் தினம் விபத்தி ற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, வாரியத்தில் காலியாக உள்ள ஆரம்ப கட்ட பணியிடங்கள் உள்ளி ட்டு 64 ஆயிரம் பணியிடங் களை நிரப்ப வேண்டும். அரசு உத்தரவாதத்துடன் கூடிய புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், மின்வாரியத்தை மேலும் பிரிக்க வகை செய்யும் அரசாணைகளை திரும்பப்பெற வேண்டும், பதவிகளை ஒழித்துக்கட்டும் ரி-டிப்ளாய்மென்ட், டிஸ்க ன்டினியூ நடவடிக்கைகளை கைவிட வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்ய வேண்டும். பணி ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வுக் காலப் பலன்களை வழங்கு வதோடு, கருணை அடிப்ப டையிலான நியமனங்களை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. ஜூலை 8 அன்று நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையில் வாரியம் உறுதியான வாக்கு றுதிகளை தரவில்லை.
காத்திருப்பு போராட்டம்
இந்நிலையில், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு செவ்வாயன்று (ஜூலை 8) காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. இதன் ஒருபகுதியாக சென்னை மின்வாரிய தலைமையகம்முன்பு அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர் தலைமையில் போராட்டம் நடத்த வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அண்ணா சாலையில் ஊழி யர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பிறகு வாரிய அலுவலகத்தின் பின்புறம் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
பணிச்சுமையால் தினசரி விபத்து
போராட்டத்தின் போது, செய்தி யாளர்களிடம் பேசிய மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், சேவைத்துறையான மின்வாரியத்தில் 60ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப 3 ஆண்டு களாக தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறோம். அடுத்தாண்டு 5 ஆயிரம் பேர் ஓய்வு பெற உள்ளனர். பணிச்சுமை யால் தினசரி விபத்து ஏற்பட்டு காக்கை குருவி போல தொழிலாளர்கள் இறக்கின்றனர். ஜூலை 8 அன்று தஞ்சாவூரில் ஏற்பட்ட விபத்தில் கேங்மேன் ஒருவர் இறந்துவிட்டார்.
ஊழியர்களின் அயராத உழைப்பால்தான், நுகர்வோர் சேவை யில் தமிழக மின் வாரியத்திற்கு பி கிரேடிலிருந்து ஏ கிரேடு கிடைத்துள் ளது. தொழிலாளர்களின் கோரிக்கை களை நிறைவேற்றாமல், அரசு ஊழி யர்களுக்கு வழங்குவது போன்று மின்வாரிய ஊழியர்களுக்கும் ரூ.5 லட்சம் பணிக்கொடை தரப்படும் என்ற அரசாணையையும், மின் விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கப் படும் என்று அமைச்சர் அறிவித்த தையும் வாரியம் செயல்படுத்த மறுக்கிறது என சுட்டிக் காட்டினார். இவற்றையெல்லாம் கண்டித்து இந்த போராட்டம் நடைபெறுகிறது என்றார்.
இந்த போராட்டத்தில் அமைப்பின் பொருளாளர் வெங்கடேசன், துணைப் பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன், பழனிவேல், ரவிக்குமார், மாநிலச் செயலாளர்கள் எஸ்.கண்ணன், ம.தயாளன் பொறியாளர் அமைப்பின் பொதுச்செயலாளர் அருட்செல்வன் உள்ளிட்டோர் பேசினர்.
நீதிமன்றம் கேள்வி
இதனிடையே, இந்த போராட்டத் திற்கு தடை கோரி மின்வாரியம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஊழியர் போராட்டத்தால் மின்தடை ஏற்படும் என்றார். அப்போது மின் ஊழி யர் மத்திய அமைப்பு சார்பில் ஆஜ ரான வழக்கறிஞர் ஆர்.வைகை, வாரி யத்தில் 60 ஆயிரம் காலிப்பணி யிடங்கள் உள்ளதை சுட்டிக்காட்டினார்.
அப்போது காலிப்பணியிடங்களை நிரப்பாதது ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதியரசர் நிதித்துறை, எரிசக்தி துறை செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 22ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். போராட்டத்தை ஒத்தி வைக்க தொழிற்சங்கத்தை அறிவுறுத்தி னார். இதனையடுத்து காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக முடித்துக் கொள்ளப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதனையடுத்து மின்வாரிய உயர் அதிகாரிகள் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்புத் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.