tamilnadu

பூக்கள் விலை கடும் உயர்வு

சென்னை, டிச.17-
பரவலாக பெய்த மழை மற்றும் பனி காரணமாக தற்போது 30-க்கும் குறைவான வாகனங்களில் மட்டுமே கோயம்பேடு சந்தைக்கு பூக்கள் விற்பனைக்கு வருகிறது.இதன் காரணமாக சாமந்தி, ரோஜா, மல்லி ஆகிய பூக்களின் விலை திடீரென அதிகரித்து உள்ளது. மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.2500 வரை விற்கப்படுகிறது.கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.100-க்கு விற்ற சாமந்தி பூ தற்போது ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டது.