சிதம்பரம், ஜூலை 13- கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்திற்குட்பட்ட நல்லூர் ஒன்றியத்திலுள்ள சேவூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யவிலை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அருகில் உள்ள வயல் பகுதிக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், அந்த பகுதி மக்கள் விவசாய தொழிலா ளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தலைமை யில் திட்டக்குடி - விருத்தாச்சலம் சாலையில் காலி குடங்களு டன் மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த நல்லூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார், திட்டக்குடி வட்டாட்சியர் புகழேந்தி, ஊராட்சிகள் இயக்குநர் பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து உடனடி யாக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.