tamilnadu

சுழற்சிமுறை வேலை என்று ஏமாற்றாதே: விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

உளுந்தூர்பேட்டை, ஜூலை 11- நூறு நாள் வேலை திட்டத்  தில் சுழற்சிமுறை வேலை என்று பயனாளிகளை ஏமாற்றி வேலை நாட்களை குறைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருநாவ லூர் மேற்கு ஒன்றியம் களமரு தூர் கடை வீதியில் ஒன்றியத் தலைவர் கே.கே.கொளஞ்சி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செம்மணங்கூர், அரளி, செல்லூர், களமருதூர், பெரி யார் நகர், பா.கிள்ளனூர், டி. ஒரத்தூர், நன்னாவரம், ஆத்தூர், வேலூர் உள்ளிட்ட ஊராட்சிகளில்  வேலை அட்டை வைத்திருக்கும் பயனாளிகள் அனை வருக்கும் 100 நாள் வேலை  வழங்க வேண்டும், சட்டப் படியான கூலி 229 ரூபாயை வழங்க வேண்டும், வீட்டிற்கு ஒருவருக்குத்தான் வேலை என்று பயனாளிகளை ஏமாற்றக் கூடாது உள்ளிட்ட  கோரிக்கைள் ஆர்ப்பாட் டத்தில் வலியுறுத்தப்பட்டன.  இதில் விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவர் பி.சுப்பிரமணியன், செயலா ளர் டி.எம்.ஜெய்சங்கர், ஒன்றி யச் செயலாளர் கே.ஆனந்த ராஜ், பொருளாளர் பி. மாணிக்கம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டிஎஸ் மோகன்,  வாலிபர் சங்க ஒன்றியச் செய லாளர் கே.தங்கமணி, விவ சாய சங்க ஒன்றியச் செயலா ளர் என்.கண்ணன், மாதர்  சங்க ஒன்றியச் செயலாளர் என்.மணிமேகலை உள்ளிட் டோர் வாழ்த்திப் பேசினர். பின்னர் அனைவரும் அதிகா ரிகளிடம் மனு அளித்தனர்.