சென்னை, ஆக.27 மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையே சுமுகமான உறவு குறைந்து வருவது கவலை யளிப்பதாக புகழ்பெற்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரும், டெபப்ரதா - ஆரோ அறக்கட்ட ளையின் இணை நிறுவன ரும், இயக்குநருமான டாக்டர் தேபராஜ் ஷோம் கூறினார். மருத்துவர் - நோயாளிக்கு இடையேயான உறவுகள் குறித்து “ டியர் பீப்புள், வித் லவ் அன்ட் கேர், யுவர் டாக்டர்ஸ்’’ புத்தகத்தை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அபர்ணா கோவில் பாஸ்கருடன் இணைந்து எழுதியுள்ளார். கோபால புரம் மோகன் நீரிழிவு சிகிச்சை மையத்தில் நடை பெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இந்த புத்தகத்தின் முக்கிய நோக்கமே மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் இடையே நல்ல உறவை வலுப்படுத்த வேண்டும் என்பது ஆகும். அதன் காரணமாக இந்த புத்த கத்தில் 30 மருத்துவர்கள் மற்றும் 5 நோயாளிகளின் கதைகள் எழுதப்பட்டுள்ளது என்றார். டாக்டர் அபர்ணா கோவில் பாஸ்கர் கூறுகை யில், மருத்துவர்களுக்கும் உலகில் உள்ள மற்றவர்க ளுக்கும் இடையிலான அழகான உறவை மீண்டும் வலுப்படுத்த இந்த புத்தகம் நிச்சயம் உதவியாக இருக்கும். மருத்துவர்கள் செய்த தவறுகளும் இதில் அலசப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்த புத்தக த்தில் நோயாளிகளின் உரி மைகளுடன் மருத்துவர்க ளின் உரிமைகளும் விளக்க ப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். முன்னதாக இந்த புத்தகத்தை டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைவரும் தலைமை நீரிழிவு நிபுணருமான டாக்டர் மோகன் வெளியிட இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.அஞ்சனா பெற்றுக் கொண்டார். தமிழக உயர் கல்விக் குழு முன்னாள் துணைத் தலைவரும் பேராசிரியரு மான டாக்டர் எஸ்.வி. சிட்டிபாபு, 91 வயது பேராசிரியர் எஸ்.எம். மிஸ்கீன் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.