மக்களவைத் தேர்தல்: கட்டுப்பாட்டு அறை அமைத்தது திமுக
சென்னை,பிப்.11- மக்களவைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுக சார்பில் கட்டுப் பாட்டு அறை(வார் ரூம்) அமைக்கப் பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான அறி விப்பை தேர்தல் ஆணையம் எப்போது வேண்டும் என்றாலும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சி களும் மும்முரம் காட்டத் தொடங்கி யுள்ளன.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுக சார்பில் கட்டுப்பாட்டறை அமைக் கப்பட்டுள்ளது. என்.ஆர்.இளங்கோ எம்பி, அன்பகம் கலை, ஆஸ்டின் ஆகி யோர் தலைமையில் இது செயல்படும்.
ஏற்கெனவே மக்களவைத் தேர்த லுக்காக கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தவும், தொகுதிப் பங்கீடு குறித்து பேசவும், தேர்தல் அறிக்கை தயார் செய்யவும் 3 குழுக்களை திமுக அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
குடும்ப அட்டைதாரர்கள் வசதிபடி கைரேகை பதியலாம்
சென்னை,பிப்.11- குடும்ப அட்டைதாரர்கள் தங்களது வசதிப்படி கைரேகையை பதியலாம் என்று தமிழ்நாடு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் துறை வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், நியாய விலைக் கடைகளில், அத்தியாவசிய பொருட்கள் பெறும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் விரல் ரேகை வைக்கப்படும் போது, ஆவணங்கள் எதுவும் கேட்கக்கூடாது. குடும்ப அட்டைதாரர்களின் வசதி யின்படி நியாயவிலைக் கடைக்கு வந்து, விரல் ரேகை பதிவு செய்து கொள்ள லாம்.
மாறாக, கட்டாயப்படுத்தி கடைக்கு அழைத்து சிரமம் ஏற்படுத்த கூடாது. விரல் ரேகை சரிபார்ப்பு மேற் கொள்ளவில்லை எனில், பொருட்கள் வழங்கப்படாது என்ற தவறான தகவலை கூறக்கூடாது என்று ஊழியர் களை அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் பதவியேற்பு
ஷில்லாங்,பிப்,11 மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சிவ் பானர்ஜி ஓய்வு பெற்றதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான வைத்தியநாதனை, மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம், ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்தது.
இதையடுத்து, கொலீஜியம் பரிந்து ரையை ஏற்ற குடியரசுத் தலைவர் திரௌ பதி முர்மு, நீதிபதி எஸ்.வைத்திய நாதனை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து உத்தர விட்டார். இதைத் தொடர்ந்து, நீதிபதி எஸ்.வைத்தியநாதனுக்கு ஞாயிறன்று (பிப்.11) ஷில்லாங்கில் உள்ள ராஜ்ப வன் தர்பார் அரங்கில் , மேகாலயா ஆளுநர் பாகு சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மென்பொருள் நிறுவன உரிமையாளரிடம் ரூ.16 லட்சம் மோசடி
சென்னை,பிப்.11- வங்கியில் கடன் பெற்று தருவ தாக கூறி மென்பொருள் நிறுவன உரிமை யாளரிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்ய ப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை தரமணியில் மென் பொருள் நிறுவனம் நடத்தி வருபவர் வினோத் தம்பிரான். தனக்கு வங்கி யில் நல்ல செல்வாக்கு இருப்பதாக கூறி சண்முகநாதன் என்பவர் அறிமுகமாகி யிருக்கிறார்.
அவர், தனது செல்வாக்கை பயன் படுத்தி கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ. 2 கோடி கடன் கேட்டுள்ளார். இந்த நிலையில், முன்பணம் ரூ.16 லட்சத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.
பணத்தை பெற்ற பின் சண்முகநாதனை தொடர்பு கொள்ள முடியாததால் அதிர்ச்சி அடைந்த வினோத் தம்பிரான், சென்னை, மாம்பலம் காவல் நிலை யத்தில் புகாரளித்த நிலையில், காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வரு கின்றனர்.