சென்னை,மார்ச் 15- புதிய பொதுச்செயலா ளரை தேர்வு செய்வதற்காக திமுக பொதுக்குழு வருகிற 29 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் கூடுகிறது. திமுக பொதுச்செயலா ளராக இருந்த அன்பழகன் சமீபத்தில் மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்காக அக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வருகிற 29 ஆம் தேதி கூடு கிறது. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- கட்சியின் பொதுக்குழு கூட்டம் வருகிற 29 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் எனது தலைமையில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.