tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சென்னையில் திமுக பவளவிழா 

சென்னை,செப்.17- திமுக  75-ஆவது ஆண்டு­ பவள விழா மற்றும் முப்பெரும் விழா  சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் செப்டம்பர் 17 செவ்வாய்க்கிழமையன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். பொதுச்செய லாளர் - அமைச்சர் துரைமுருகன் தலைமையுரையாற்றி னார்.

பல்வேறு நிர்வாகிகளுக்கு விருதுகள் வழங்கப் பட்டன. விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

மின்கட்டண உயர்வுக்கு எதிராக புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு

புதுச்சேரி,செப்.17- மின் கட்டண உயர்வைக் கண்டித்தும் அதனை ரத்து செய்யக்கோரியும் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் இன்று (செப்டம்பர் 18) முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு கடந்த ஏப்ரல் 1 ஆம்  தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தி யது. நாடாளுமன்றத் தேர்தல் வந்ததால்  மின் கட்டண உயர்வை அரசு நிறுத்தி வைத்தது. தேர்தல் முடிந்த பின் ஜூன் 16 ஆம் தேதி முன்தேதியிட்டு மின் கட்டண உயர்வை அரசு அமல்படுத்தியது.  

இதற்கு மக்களும் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கள் கட்சி ஆகிய அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். ஆனால் மின் கட்டண உயர்வை என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு திரும்பப் பெறவில்லை. இதனால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தால் புதுச்சேரி, காரைக் காலில் பேருந்துகள், டெம்போ, ஆட்டோ  ஓடாது என்றும் பல தனியார் பள்ளிகள், கல்லூரிகளும் விடுமுறை அறிவித்துள்ளன.

பாதுகாவலர் விருது வழங்க  அரசாணை வெளியீடு

சென்னை,செப்.17- நீர்நிலைகளை பராமரிப்பதில் சிறப்பாக செயல்பட்டு வரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தனி நபர்களுக்கு முதலமைச்சர் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

ஒரு மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 38 மாவட்டங்களில் 38 பேருக்கு விருது வழங்க அரசாணை வெளியீடு செய்யப் பட்டது. விருது பெறுபவருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகை என்ற அடிப்படை யில் ரூ.42 லட்சம் ஒதுக்கீடுசெய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.