சென்னை, செப். 19- தீபாவளி சிறப்பு பேருந்து களுக்கான முன்பதிவு அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கும் என போக்கு வரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளு டன் ஆலோசனை நடத்தி னார். போக்குவரத்துத் துறை செயலர் மற்றும் போக்கு வரத்து காவல் உயரதிகாரி கள் இதில் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், “கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளிக்கு சிறப்பு பேருந்து கள் இயக்கப்படும்”என்றார். கடந்த ஆண்டைப் போலவே கோயம்பேடு, தாம் பரம் சானடோரியம், மதுர வாயல், மாதாவரம், கே.கே. நகர் ஆகிய 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலை யங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டு 20 ஆயி ரத்து 500-க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 21 ஆயிரம் பேருந்துகள் இயக் கப்பட உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். அக்டோபர் 23ஆம் தேதி முன்பதிவு தொடங்குகிறது என்றும், 26 இடங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என வும் அதேபோல் சொந்த ஊர் களில் இருந்து சென்னை திரும்பவும் சிறப்பு பேருந்து கள் இயக்கப்படும் எனவும் அவர் கூறினார். ஆயுத பூசை விடு முறையை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னையில் இயக்கப்ப டும் மின்சார பேருந்து சிறப் பாக செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிட்ட அமைச் சர், மேலும் ஒரு மின்சார பேருந்து இயக்கப்பட உள்ள தாக கூறினார். இன்னும் ஓர் ஆண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வரு கிறது எனவும் அவர் தெரி வித்தார். தமிழ்நாட்டில் மோட்டார் வாகன சட்டத்தின்படி அபரா தம் விதிக்கப்படுவது தொடர்பாக ஆய்வு செய்யப் பட்டு வருகிறது. அபராதத் தொகை குறைக்கப்படும். இதுதொடர்பாக முதல மைச்சரிடம் ஒப்புதல் பெறப் படும். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது எனவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். போக்குவரத்து துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.