tamilnadu

img

ஒரு லட்சம் விதைப்பந்துகள் வீசும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஒன்றியங்களில் சுமார் 375 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 4.5 கோடி மதிப்பில் 30 லட்சம் மரக்கன்றுகள் மற்றும் ஒரு லட்சம் விதைப்பந்துகள் வீசும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி துவக்கி வைத்தார். இதன் தொடக்க நிகழ்ச்சியாக, துரிஞ்சாபுரம் ஒன்றியம் வள்ளிவாகை ஊராட்சியில் உள்ள அரசு நிலத்தில், 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியையும் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் விதைப்பந்தகள் வீசும் நிகழ்ச்சியையும் துவக்கி வைத்தார். இதில், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.