சென்னை, ஜூன் 19- மத்திய அரசின் புதிய வரைவு கல்விக்கொள்கை தொடர்பாக விவாதிக்க தமிழக சட்டமன் றத்தை கூட்ட வேண்டும் என்று முதலமைச்சருக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது. தமிழ்நாடு அறிவியல் இயக் கம் பள்ளி முதல் பல்கலைக் கழ கம் வரை பணியாற்றும் ஆசிரி யர்கள், மத்திய-மாநில அரசு ஊழியர்கள், விவசாயிகள் முதல் விஞ்ஞானிகள் வரை அனைத்து பகுதி மக்களையும் உறுப்பின ராகக் கொண்டது. 1980 ஆம் ஆண்டு முதல் கல்வி அறிவியல் பரப்புதல், அறிவியல் கண் ணோட்டம் வளர்த்தல் போன்ற நோக்கங்களை முன் வைத்து செயல்பட்டுக் கொண்டிருக் கும் ஒர் அமைப்பு. அறிவொளி இயக்க கால கட்டத்தில், அறிவொளி இயக்கத் தின் மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்க ளாக பணியாற்றியதும் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் பொறுப்பாளர்களே. மேலும் கல்வியின் வளர்ச்சியில் அர சோடு இணைந்தும், தனித்தும் தொடர்ந்து கல்வித்தளத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இயங்கி வருகிறது. மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கை முயற்சிகளில் தொடர்ந்து தலை யீடு செய்து வருகிறோம். தற் போதைய அரசு வெளி யிட்டுள்ள புதிய வரைவு கல்விக் கொள்கையின் மீது ஒரு மாதத் திற்குள் கருத்து கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக முதல் அமைச் சர்கள் கூட்டத்தையும், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கூட்டியுள்ளதாக அறிய முடிகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழக முதலமைச்சரின் உடனடி கவ னத்திற்கு சில விஷயங்களை கொண்டு வர விரும்புகிறது. அதில் முதலாவதாக, மக்களின் வாழ்வு, முன்னேற்றம் ஆகிய வற்றின் அடிப்படைத் தேவை களில் ஒன்றான கல்வி. இதில் அடுத்து கால் நூற்றாண்டுக்கு தாக்கத்தை உருவாக்கும் ஓர் ஆவணத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த ஆவணம் என்பது இந்திய மக் கள் குறைந்தபட்சம் இந்திய அர சியல் சாசனத்தின் படி அங்கீ கரிக்கப்பட்ட மொழிகளிலேனும் மொழி பெயர்ப்பு செய்து கொடுக்க வேண்டும். அதன் பின் னர் அதன் மீது அவர்கள் கருத்துக் கூற போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும். இப்போது அளித்துள்ள கால அவகாசம் போதாது. எனவே மத்திய அரசு தயா ரித்து சுற்றுக்கு விட்டுள்ள வரைவு கல்விக் கொள்கை அறிக் கையை உடனடியாக தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளி லும் வெளியிட வேண்டும். வெளி யிட்ட பின்னர் அதில் இருந்து கருத்து கூற ஆறு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலி யுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறது. அடுத்ததாக, சமவாய்ப்பு மற்றும் சமூக நீதியுடன் கூடிய கல்வியை வழங்கியதில் தமிழ் நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. ஆனால் இந்த மாநிலத்தில் கஸ்தூரி ரங்கன் குழு, தமிழ்நாடு நன்கு அறிந்த கல்வியாளர்கள், கல்வியில் கல்லூரிகள் பல்கலைக்கழகங் கள் என்று யாரிடமும் கருத்து கேட்க வில்லை. இப்படிப்பட்ட அணுகுமுறை என்பது தமிழ் நாட்டை அவமதிக்கும் செய லாகும். எனவே இதனை வர விருக்கும் கூட்டத்தில் தமிழக அரசு சுட்டிக் காட்டி தங்கள் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும். மூன்றாவது, தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழக கல்வி வரை கல்வி முறை, கற் றல், கற்பித்தல் முறைகள், கல்வி நிர்வாகம், நிதி வழங்குதல், இட ஒதுக்கீடு, என பல தளங்களில் அடிப்படை மாறுதல்களை கொண்டு வரத் தக்கவை. எனவே தமிழ்நாடு அரசு இது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி இதுபற்றி விவாதிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தமிழக அரசு தன் கருத்துக்களை முதலமைச் சர்கள் கூட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். இறுதியாக, புதிய வரைவு கல்விக் கொள்கையின் பல அம்சங்கள், அடிப்படைகள், அதன் விளைவுகள் இந்திய கூட்டாட்சி முறை மைக்கு எதிரா னது; சமூக நீதிக்கு எதிரானது; சமவாய்ப்புக்கு புறம்பானது.; தமிழ்நாடு கல்வி வளர்ச்சி மூலம் பெற்றுள்ள முன்னேற் றத்தை பின்னோக்கி தள்ளுவ தாகும். எனவே தமிழக முதல் வர் சிறப்பு சட்ட மன்றக் கூட் டத்தை கூட்டி இதுபற்றி விவா தித்து தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழ் நாடு அறிவியல் இயக்க மாநில பொதுச் செயலாளர் அ. அமல ராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.