tamilnadu

img

ஜாமீனில் வந்தும் குற்றம் செய்தால் ‘பெயில்’ ரத்து டிஜிபிக்கு அறிவுறுத்தல்

சென்னை, மே 10 - ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது தெரிந்தால் அவர்களுடைய ஜாமீனை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று காவல்துறைக்கு அறிவுறுத்தப்  பட்டு உள்ளது.

இதுதொடர்பாக, அரசு தலைமை குற்றவியல் வழக் கறிஞர் அசன் முகமது ஜின்னா காவல் துறை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: “ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடு வது தெரிந்தால் அவர்களு டைய ஜாமீனை ரத்து செய்ய  அரசு குற்றவியல் வழக்கறி ஞரை அணுகி உரிய நட வடிக்கை மேற்கொள்ள காவல் துறையினரை அறிவுறுத்த வேண்டும்.  

அதே போன்று, குற்றவாளி களுக்கு ஜாமீன் வழங்கும் போது நீதிமன்றங்கள் நிபந்த னைகளை விதிப்பது வழக்க மான ஒன்று. இவ்வாறு நீதி மன்றங்களால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறுபவர் களின் ஜாமீனையும் ரத்து  செய்ய உரிய நடவடிக்கை யினை மேற்கொள்ளுமாறு காவல்துறையினரை அறி வுறுத்த வேண்டும்.  சமுதாயத்தை பாதிக்கும் கடுமையான குற்றங்களில், உரிய காலக்கெடுவிற்குள் புலன் விசாரணை முடித்து இறுதி அறிக்கையை நீதிம ன்றத்தில் தாக்கல் செய்யத் தவறுவது, குற்றவாளிகள் எளிதில் ஜாமீன் பெற வழியாகி விடுகிறது.

அதனைத் தடுத்திட, கடுமையான குற்ற வழக்குகளில் தனிக்கவ னம் செலுத்தி, புலன் விசார ணை செய்து, உரிய காலக் கெடுவுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதுடன் வழக்கு விசாரணையையும் விரைந்து முடிக்க காவல்துறையினரை அறிவுறுத்த வேண்டும்.  ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் சாட்சிகளை கலைப்பது, மிரட்டுவது போன்ற சட்ட விதிகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் பட்சத்தில், காவல்துறையினர் அரசு குற்றவியல் வழக்க றிஞர்களை கலந்தாலோசித்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 இவ்வாறு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தால் குற்ற வாளிகள் தொடர் குற்றங் களில் ஈடுபடுவதை தடுக்க முடியும்.”  இவ்வாறு மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்க றிஞர் அசன் முகமது ஜின்னா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.