tamilnadu

img

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணங்கள் நிர்ணயம்... அரசாணை வெளியீடு....

சென்னை:
தமிழக தனியார் மருத்துவ மனைகளில் கொரோனா சிகிச்சைக் கான கட்டணங்கள் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆக்சிஜன் அல்லாத படுக்கை வசதியில் சிகிச்சை பெறுபவர்களும் ஒருநாள் கட்டணமாக 5000 ரூபாய் முதல்7500 ரூபாய் வரை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதாவது ஏ3 முதல் ஏ6 தரவரிசையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு 5000 ரூபாய் கட்டணமும் ஏ1 மற்றும் ஏ2 தரவரிசையிலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு 7500 ரூபாய் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதியோடு சிகிச்சை பெறுபவர்களுக்கு ஒருநாள் கட்டணமாக 15,000 ரூபாயும், வெண்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சை பெறுபவர்களுக்கு ஒருநாள் கட்டணமாக 35,000 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தீவிர சிகிச்சை பிரிவில் ஊடுருவாத வெண்டிலேட்டர் வசதியுடன் சிகிச்சை பெறும்நோயாளிகளுக்கு நாள் ஒன்றின் கட்டணமாக 30,000 ரூபாய் நிர்ண யிக்கப்பட்டுள்ளது.ஆக்சிஜனுடன் கூடிய தீவிர சிகிச்சை படிப்படியாக குறைப்பதற்கு மட்டும் ஒருநாள் கட்டணமாக 25,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையில் தனியார் மருத்துவமனைகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விட கூடுதலான தொகை வசூலிக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட நபர் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 3993 மற்றும் 104 என்ற எண்ணில் புகார்அளிக்கலாம் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

;