tamilnadu

img

சிமெண்ட் விலை நிர்ணயம்:  அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை:
தமிழகத்தில் சிமெண்ட் விலையை நிர்ணயிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் அதிக விலைக்கு சிமெண்ட் விற்கப்படுவதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, நான்கு வாரங்களில் மனுவுக்கு விளக்கமளிக்க, தமிழக பொதுப் பணித்துறை மற்றும் தொழில் துறை செயலாளர்களுக்கு உத்தரவிட்டது.

;