tamilnadu

img

மதிமுக துணைப் பொதுச் செயலாளர் துரை. பாலகிருஷ்ணன் மறைவு....

சென்னை:
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் துரை. பாலகிருஷ்ணன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 83.துரை. பாலகிருஷ்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திராவிட இயக்க உணர்வாளர். இளைஞராகத் திமுகவில் இணைந்து, ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.துடிப்பான செயல்வீரர். அதனால்,  மக்களின் பேரன் பைப் பெற்று, ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியப் பெருந் தலைவராக மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டார்.தஞ்சாவூர் மாவட்டக் கவுன்சில் உறுப்பினர், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் என பல தேர்தல்களில், மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றவர். வடக்கூர் தலைவர் என்று மக் களால் அன்போடு அழைக் கப்பட்டார்.

மதிமுக தொடங்கிய நாள் முதல் தன்னை இணைத்துக் கொண்டார். கடந்த 27 ஆண்டு காலமாக எத்தனையோ சோதனைகளில், நெருக் கடியான காலகட்டங்களில் எனக்கு உறுதுணையாக பக்கபலமாக இருந்தார்.கடந்த சில மாதங்களாகவே உடல் நலக் குறைவுற்று சிகிச்சை பெற்று வந்தார். அவரது மறைவு, கழகத்திற்கு வந்துள்ள கண்ணீர்ச் சோதனையாகும்.அவரது மறைவால் துயரத்தில் பரிதவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

;