tamilnadu

img

மதிமுக துணைப் பொதுச் செயலாளர் துரை பாலகிருஷ்ணன் காலமானார்....

சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:

மதிமுகவின் துணை  பொதுச் செயலாளர் துரை பாலகிருஷ்ணன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தஞ்சையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.துரை பாலகிருஷ்ணன் அவர்கள் சிறந்தபண்பாளர், பழகுவதற்கு இனிமையானவர், அனைத்துக் கட்சிகள் சார்பாக நடத்தியகூட்டு இயக்கங்களில் கலந்துகொண்டவர். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மதிமுகவினருக்கும் சிபிஎம் சார்பில் ஆறுதலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;